Friday, November 13, 2015

தீபாவளி கவிதைகள்


"  தீபாவளி சிறப்பு கவிதைகள் ...;”

=============================≠====

வெளிநாடு சென்றது அன்பு...
வாட்ஸ்ஆப்பில் வருகிறது வாழ்த்து....
ஆண்ட்ராய்டில்...
தீபாவளி கொண்டாட்டம்...!!!

வெளிநாட்டு கணவன்...!!!

===========================

தேடியலைகிறது காவல்துறை
கொலை செய்தது எவரோ???
............      .......     ..........
தெருவெங்கும்...
பட்டாசு பிரேதங்கள்...!!!

===========================

நாம்...
ஒருநாள் மகிழ்வதற்காய்...
வருடமுழுதும் சிதைகிறான்....

பட்டாசு ஆலையில்
தொழிலாளி....!!!

≠=============================

வீதியெங்கும் சிதறிக்கிடக்கிறது....!!!
பட்டாசுத்தாள்கள்...!!!
எந்த அப்பாவின் பணத்தாள்களோ ...???

===================================

பண்டிகையை...
  பணமாக்கியது...!
    டாஸ்மாக்...!!!?????

================================

அடைபட்ட கடன்....
உயிர்பெற்றது....
  அடுத்த பண்டிகையின்
      வரவால்...!!??

.===============================
=================================

1 comments:

  1. சிந்திக்க வைத்த தீபாவளி கவிதைகள்

    ReplyDelete

ஏதாவது சொல்லிட்டுப்போங்க...