Friday, November 13, 2015

வேலைநிறுத்தம்

எல்லா மரங்களும்... ஒன்று கூடி முடிவெடுத்தன...!!

தன்னை அழிக்க நினைக்கும் மனித இனத்திற்கு ,
தன் எதிர்ப்பை காட்டும் விதமாக, ஒருநாள் ...
அடையாள வேலைநிறுத்தம் செய்ய முடிவெடுத்தன...!!

வேலைநிறுத்தம் முடியும் முன்பே...
மடிந்து போனது மனிதயினம்...!!

"தவறு செய்துவிட்டோமே "...!!!
என....
கதறி அழுதன...
மரங்கள்...!!
===========    ============    ========

0 comments:

Post a Comment

ஏதாவது சொல்லிட்டுப்போங்க...