Thursday, August 14, 2014

"மலட்டு தேசம்..."

@   அன்று ..
       உப்பைக்கொண்டு
       விடுதலைப்போர் கர்ஜித்தார்
       காந்தியடிகள்..!!
       இன்று..
       மரபணு விதைகள் கொண்டு
       நமக்கு அடிமை சாசனrம்
       அமைக்கிறது அமெரிக்கா,!!

@    சவப்பெட்டி ஆணிகளை
       சப்தமில்லாமல் செதுக்கியது....!!
          100 கோடி மக்களையும்
        எந்த சிலுவையில் அறைய
         போகிறது.....??

@       காந்தி வாங்கிய சுதந்திரம்
          காந்தி நோட்டிற்காய்
          கடன் படுகிறது..!!
          மரபணு விதைகள் எனும்   
            வேசியிடம்
          சிறைபடுகிறாள்  இந்திய நிலமகள்..!!

@       முதல்முறையாய்...
          கற்பை இழக்கிறது கண்ணகி தேசம்..!!
          கருக்கலைப்பு செய்ய
           கைவிலங்கோடு
          காத்திருக்கிறார்கள்:

          என்தேசத்து எட்டப்பன்கள்....!!

            எட்டி நின்று அழுகிறது 

           இந்திய சுதந்திரம்..!!???

@           இந்தியர்களுக்கு மானம்
             இருக்கிறது,
             மூளை இருக்கிறதா???
             மலட்டு விதையால்
             இந்திய மண்ணை மட்டுமல்ல
              இந்தியர்களையே
             மலடாக்க துணிந்து விட்டது...!!

@         இனியும் புரியவில்லையெனில்
            இனி   நாம் இந்தியர்களல்ல:
            அமெரிக்கர்கள்...   !!???

============{$$$$$$}========
             

0 comments:

Post a Comment

ஏதாவது சொல்லிட்டுப்போங்க...