Sunday, August 10, 2014

மரங்களெனும் அமுதசுரபி

     மரங்கள் என்கிற அமுதசுரபி

@    இரவு பொழுது வந்தாலும்
        ஊரு உறங்கி கிடந்தாலும்
        புரண்டு உறங்க தெரியாத
        உறவுக்காரன் இவன்தானே,..!!!

@     இவன்..கக்கும் வாந்தி
        எடுத்து வச்சி
        உயிர்கள் வாழுது பூமியில..!!
        காலம் கொடுத்த கர்ப்பபையில்
        நம்மை சுமக்கும் சாமியிவன்.,!!

@      கண்ணீர் வரலன்னா ஒன்னுமில்ல-  
          மழை
         தண்ணி வரலன்னா சங்கடந்தான்,.!!
         இவன் நம்ம விட்டு போனதால-இப்ப
        அழுகுது பாரு ஊர் குடந்தான்..!!

@     வானம்,பூமி,பெத்தபுள்ள-நித்தம்
        நமக்கு சோறு தந்தான்..!!
        செஞ்ச நன்றி மறந்ததால-இப்ப
        நமக்கு ஊறு தந்தான்..!!

@     தாயி சுமந்தா நம்மயெல்லாம்
        பத்துமாசம் மட்டுந்தான..
        சாகும் வரைக்கும் நம்மையெல்லாம்
        காப்பதிந்த தாய்மடியே..!!

@     காலப் பிடிச்சி கெஞ்சிடுறேன்...
       "மரத்த வெட்ட "  வேணாமுன்னே..
        பெத்தவள வெட்டிடத்தான்
        யாருக்காச்சும் மனம் வருமா.,???!!!

1 comments:

ஏதாவது சொல்லிட்டுப்போங்க...