Sunday, August 10, 2014
சுகாதாரன்
சுகாதாரன்...
@ கண்மாய்கள் எல்லாவற்றிலும்
காண்கிறேன்..
வெளுத்தவர்களின் வியர்வைத்தனம்
குறையாமல் கூடியது: தண்ணீரில்
கண்ணீர் கரைசல்...
@ வெள்ளாவின் பானையெல்லாம்- இந்த
அப்பாவியின் எதிர்காலம்...!!
படியும் அழுக்கில்தான் வாழ்கிறது;
யிந்த
அழுக்குநாயகனின் ஆசை கனவுகள்.,
@ நூலிழையில் பிழைத்தவருண்டு;
இவனோ
நூலிழையால் பிழைப்பவன் தினம்...
இல்லாத பேயை
ஓட்டுவோர்க்கிடையில்
இருக்கின்ற அழுக்கை
விரட்டிடுமிவனே
இச்சமூகத்தின் சுத்ததாரி...!!!!
@ சத்தமாய் பேசுவோர்க்கிடையில்
இவனின் சுத்தங்கள்
சப்தம் கேட்காமல் குமுறியது
கூலிக்காய்.,!!!
@ நீரை சுவைத்திட ஆற்றின் கரைகள்
காய்வதியற்கை,.
வெளுத்த வேட்டி கரைகள்
காய்வதற்காய்...
கரைகளில் காயுமிவந்தான்
சுகாதாரங்களின் சுயவிரும்பி...!!!











0 comments:
Post a Comment
ஏதாவது சொல்லிட்டுப்போங்க...