Wednesday, January 1, 2014
யதார்த்த கவிதைகள்
ஓர் மழை நேர இரவில்..
@ அம்மாவிடம் செல்லமாய் அடிபடுவதற்கும்
அவள் கரத்தால் தலை துவட்டவும்;
வேண்டுமென்றே நனைவதுண்டு..
ஓலமிட்டு அழும்-அந்த
ஆகாய கண்ணீரில்..!!
@ பருவபெண் தாண்டி செல்ல
எழும் கூந்தல் வாசனை போல்
மழைநேர மண் வாசனைக்காய்
தியாகம் செய்ததுண்டு..
இரவு நேர தூக்க பொழுதுகளை...!!
@ உடுப்புகள் மட்டுமல்ல உள்ளம் வரை நனைந்தாலும்
மருத்துவமனை வீதி வரை கூட
எனை அழைத்ததில்லை-என் செல்லமழை..!!
@ கருப்பு நிறம் கண்டிப்பதோ என்றெண்ணி
ஏற்கனேவே இருந்தாலும்-வாங்கினேன்
பச்சை வர்ணங்களில் குடைகளை..
எத்தனையிருந்தாலும் வேண்டுமென்றே
விடுமுறையளித்திடுவேன் -என் வீட்டு குடைகளுக்கு..!!!
@ எதிர்வீட்டு சிறுமி..
பக்கத்து வீட்டு பலராமன்...என
எவர் நனைந்தாலும் விரட்டி விட்டு
எவருமில்லா சமயம் பார்த்து-நன்றாய்
நனைந்திடுவேன்-அந்த
ஆகாய பன்னீரில்..!!!
இதெல்லாம் ஒரு காலம்..இன்று..
ஆகாய கங்கையுமில்லை,
இழுத்து துவட்ட அன்னையுமில்லை..!!!??????
Tweet











0 comments:
Post a Comment
ஏதாவது சொல்லிட்டுப்போங்க...