Wednesday, July 27, 2016
கவிதைக்காடு
"ஹைக்கூ மின்னல்கள் "....!!!
==================================
எந்த கொத்தன் கட்டினானோ ??
ஆகாய சுவரெங்கும்
ஒரே விரிசல்...!!
"மின்னல்"...!!
===========================
சிறுக,சிறுக சேர்த்ததையெல்லாம்
வீணாக்கியது வானம்..!!
"மழை"....!
==================================
அழகுபடுத்திய முகத்தை
அசிங்கபடுத்தினாள் அன்னை..?!!!
" திருஷ்டிபொட்டு"...!!!!
==================================
மனித அறிவு,
கடவுளுக்குதவியது..
ஆலயந்தனில்
"மெட்டல் டிடெக்டர் "..!!
=================================
விமானங்கள் மோதாத
அடுக்குமாடி குடியிருப்பு...
தேன்கூடு...!!!
=================================
நுகர்ந்த காற்றில்
இரத்ததுர்நாற்றம்...
அருகில் எங்கோ
வெட்டுபட்ட மரங்கள்..!!!
===================================
நல்லசெய்தி கொண்டுவந்தும்
கிழிபடத்தான் செய்கிறது..
"கடிதம்"....!!!
===========================≠======
எந்த கல்லூரியில்
கற்றுக்கொடுக்கிறார்கள்....
பறவைக்கும் கட்டிடக்கலை...
"தூக்கணாங்குருவி"....!!!!
==================================
Tweet










Kavidhakal anaithum arumai
ReplyDelete